31. திருஅரசிலி ஒழிந்தியாப்பட்டு | தொண்டை நாட்டுத் தலம். மக்கள் வழக்கில் ‘ஒழிந்தியாப்பட்டு’ என வழங்குகின்றது. (1) திண்டிவனம் - பாண்டிச்சேரி (வழி) கிளியனூர். சாலையில் கிளியனூர் தைலாபுரம் தாண்டி ‘கீழ்புத்துப்பட்டு’ என்னும் கைகாட்டி மரமும், ஒழிந்தியாப்பட்டு என்னும் கைகாட்டி மரமும் உள்ள இடத்தில் இடப்புறமாகப் பிரியும் அக்கிளைப் பாதையில் 2 கி.மீ. சென்று ஒழிந்தியாப்பட்டு அடையலாம். (கிளைப்பாதை பிரியுமிடத்தில் தேவஸ்தானப் பெயர்ப் பலகையுள்ளது.) (பாண்டிச்சேரியிலிருந்து 17-ஆவது கி.மீ.-ல் இக்கிளைப் பாதை பிரிகிறது. (2) திருவக்கரையைத் தரிசித்து விட்டு வருவோர் மெயின் ரோடுக்கு வந்து, மயிலம் - வானூர் வழிச் செல்லும் - பாண்டிச்சேரி சாலையில், திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டினை அடைந்து, அப்பாதையில் திண்டிவனம் செல்லும் மார்க்கத்தில் சென்று, மேற் சொல்லியவாறு ‘கீழ் புத்துப்பட்டு’ என்னும் கைகாட்டி மரம் உள்ள |