அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கியுள்ளது. நின்ற திருக்கோலம். “வேதவித்தாய் வெள்ளைநீறு பூசி வினையாயின கோது வித்தாய் நீறெழக்கொடி மாமதிலாயின ஏதவித்தாயின தீர்க்குமிடம் இரும்பைதனுள் மாதவத்தோர் மறையோர் தொழநின்ற மாகாளமே” (சம்பந்தர்) “-பத்தியுள்ளோர் எண்ணும் புகழ்கொள் இரும்பை மாகாளத்து நண்ணும் சிவயோக நாட்டமே.” (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. மகாளேஸ்வரர் திருக்கோயில் இரும்பை & அஞ்சல் (வழி) ஆரோவில் வானூர் வட்டம் - கடலூர் மாவட்டம் - 605 010. 33/1. திருநெல்வாயில் அரத்துறை திருவரத்துறை, திருவட்டுறை. | நடுநாட்டுத் தலம். தற்போது திருவரத்துறை என்றும் திருவட்டுறை என்றும் வழங்குகின்றது. தொழுதூர் விருத்தாசலம் பேருந்துச் சாலையில் தொழுதூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. சாலையில் ‘கொடிகளம்’ என்னும் இடத்திலிருந்து பிரிந்து செல்லும் மண் சாலையில் சுமார் 1 கி.மீ. சென்றால் இத்தலத்தை யடையலாம். காரில் செல்வோர் கோயில்வரை செல்லலாம். நிவா நதியின் கரையில் உள்ள இத்தலத்தில்தான் திருஞான சம்பந்தருக்கு இறைவன் முத்துச் சிவிகையும் முத்துக் குடையும் சின்னங்களும் அருளினார். ஊர் நெல்வாயில் ; கோயில் - அரத்துறை. |