பக்கம் எண் :

164 திருமுறைத்தலங்கள்


     நடுநாட்டுத் தலம்.

     மக்கள் வழக்கில் தீர்த்தனகிரி என்று வழங்குகிறது.

     தனிப் பேருந்தில் செல்வோர் கடலூர் - சிதம்பரம் மெயின் பாதையில்,
சிதம்பரத்திற்கு 45-வது கி.மீ.ல் ஆலப்பாக்கம் - புதுச்சத்திரம் இவற்றிற்கு
இடையில் மேட்டுப்பாளையம் என்னும் இடத்தில் தீர்த்தனகிரி என்று
கைகாட்டி உள்ள இடத்தில் பிரியும் சாலையில் 5 கி.மீ. சென்று ; தானூர்
என்று பெயர்ப் பலகையுள்ள சாலையில் போய், தானூரையடைந்து,
தெருக்கோடியில் இடப்புறமாகச் செல்லும் சாலையில் சென்று ; மேலும்
இடப்புறமாகப் பிரிந்து செல்லும் சாலையில் சென்று இவ்வூரையடையலாம்.

     பெரியான் என்னும் பள்ளன் தன்நிலத்தை உழுதுகொண்டிருக்கும்போது
இறைவன் அடியவராக வந்து அன்னம் கேட்க ; அவன் தன் தொழிலை
நிறுத்திவிட்டு உணவு கொண்டுவரத் தன் வீடு சென்றான். அவன் திரும்பி
வருவதற்குள் இறைவன் அந்நிலத்தில் தினை விளைந்திருக்குமாறு செய்தார்.
வந்த பெரியான் கண்டு திகைக்க இறைவன் அவனுக்குக் காட்சி தந்தார்.
அதிசயமாகத் தினை விளைந்ததால் இத்தலம் ‘தினைநகர்’ என்று பெயர்
பெற்றது.

     இறைவன் - சிவக்கொழுந்தீசர், சிவாங்கரேஸ்வரர், திருந்தீஸ்வரர்
     இறைவி - நீலாயதாக்ஷி, ஒப்பிலாநாயகி, கருந்தடங்கண்ணி,
              இளங்கொம்பன்னாள்.
     தலமரம் - கொன்றை.
     தீர்த்தம் - ஜாம்பவ தீர்த்தம்.

     வீரசேன மன்னனுக்கு இத்தீர்த்தத்தில் மூழ்கி, வெண்குஷ்டம்
தீர்ந்தமையால் அவனே இக்கோயிலைக் கட்டினான் என்பது வரலாறு. சுந்தரர்
பாடல் பெற்ற தலம்.

     இராசகோபுரம் மூன்று நிலைகளையுடையது. கவசமிட்ட கொடிமரம்.
நந்தி பலிபீடங்கள் உள. வலப்பால் அம்பாள் சந்நிதி. பிராகாரத்தில் நால்வர்,
விநாயகர், சுப்பிரமணியர், வீரசேன மன்னன் சந்நிதிகளும், தலமரமாகிய
கொன்றையும், பைரவர், சூரியன் திருமேனிகளும் உள்ளன.

     வலம் முடித்து, பக்கவாயில் வழியாக நேரே உட்சென்றால் நடராச
சபை. அழகான சிரித்த முகம். நடராச மூர்த்தியின் கீழே பீடத்தில்
மகாவிஷ்ணு, சங்கை வாயில் வைத்து ஊதுவதுபோலவும் பிரம்மா