46/14. திருவெண்ணெய் நல்லூர். | நடுநாட்டுத் தலம். 1) விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் அரசூர் சென்று High-ways Inspection Bungalow வை அடுத்து வலப்புறமாகச் செல்லும் திருக்கோயிலூர் பாதையில் சென்று திருவெண்ணெய் நல்லூர்ரோடு Railway Station லெவல் கிராசிங்கைத் தாண்டிச் சென்றால் (5 கி.மீ) ஊரையடையலாம். (ஊருள் இடப்புறமாகச் செல்லும் சாலையில் போய்க் கோயிலையடையலாம்.) 2) பண்ருட்டி - அரசூர் சாலையில் உள்ள தலம். 3) திருக்கோயிலூரிலிருந்து சித்தலிங்க மடம் வழியாகவும், 4) மடப்பட்டிலிருந்து பெரிய செவலை வழியாகவும் திருவெண்ணெய் நல்லூருக்குப் பேருந்துகள் உள்ளன. 5) விழுப்புரம் - திருவெண்ணெய் நல்லூர் நகரப் பேருந்து உள்ளது. 6) (திருக்கோயிலூர்) கீழையூரிலிருந்து செல்வோர் மடப்பட்டு, கடலூர், பண்ருட்டி செல்லும் பாதையில் (Main Road) ல் சென்று, பண்ருட்டி சாலை வலப்புறமாகப் பிரிய ; இடப்பக்கமாகப் பிரியும் உளுந்தூர்ப்பேட்டை சாலையில் திரும்பி ஊரையடையலாம். கீழையூரிலிருந்து இத்தலம் 18 கி.மீ. தொலைவு. சுந்தரரின் அருள் வாழ்விற்கு இடமான தலம். வழக்கிட்டு, ஆரூரரை வலியவந்து ஆட்கொண்ட தலம் ; நின் ‘வருமுறைமனையும் நீடு வாழ்க்கையும் காட்டுக’ என்று கேட்டவர்க்கு ‘என் இருப்பிடம் இதுவே’ என்று இறைவன் காட்டிய திருக்கோயிலை உடைய பதி. ‘அடையா நெடுங்கதவும் அஞ்சல் என்ற சொல்லும் உடையான்’ |