பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 231


     கற்பகக் கனிரசக் கடலமுத வாரிதேன்
           கடலென மகிழ்ந்து பாடும்
     திருப்புகழ் முழக்குமணி ஈராறு செவியனே
           சிறுபறை முழக்கியருளே
     தென்னருணை வளர்கோபு ரத்துவாழ் முருகனே
           சிறுபறை முழக்கி யருளே.
                     (க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ்)

    மருளே ரிடைய பவப்பிணிக்கு
        மருந்தே வருக வாழ்வளிக்கும்
    மணியே வருக மனம் விளக்கும்
        மதியே வருக குறையாத

    பொருளே வருக மாற்றறியாப்
         பொன்னே வருக பொன்னாய
    பூணே வருக வேதாந்தப்
         பொலிவே வருக சித்தாந்தத்
    தெருளே வருக சிவஞானத்
         தேனே வருக திருவாளர்
    தேடி வைத்த பேரின்பத்
         திரளே வருக சன்மார்க்க
    அருளே வருக திருவருணை
         அருந்தாமுலையாய் வருகவே
    அலகில் விளையாட் டயருமெங்கள்
         அம்மே வருக வருகவே.
                   - உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ்

                                   “-யாம் ஏத்தும்
    உண்ணாமுலையாம் உமையோடு மேவு திரு
    அண்ணாமலை வாழ் அருட்சுடரே.”
                                           (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

    அ/மி. அருணாசலேஸ்வரர் திருக்கோயில்
     திருவண்ணாமலை & அஞ்சல்
     திருவண்ணாமலை மாவட்டம் - 606 601.