பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 275


                          சட்டை நாதர்

    
துங்க மாமணித் தூணில்வந் திரணியன்
         தோள்வலி தனைவாங்கும்
     சிங்க வேற்றுரி அரைக்கசைத் துலகெலாம்
         தேர்ந்தளந் தவன்மேனி
    அங்கம் யாவும்ஓர் கதையதாய்க் கொண்டதன்
         அங்கியாப் புனைகாழிச்
    சங்க வார்குழைச் சட்டைநா யகன்துணைத்
         தாமரைச் சரண்போற்றி


  திருவாவடுதுறை ஆதீனம் எட்டாவது குருமகாசந்நிதானம்

   ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக சுவாமிகள் இயற்றியருளிய

                   திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ்

    கோலொன்று கொண்டகில வலயம் புரக்கவரு
          கோமாறன் மேவிய தமிழ்க்
     கூடலிற் சமண்மூகர் திருமடத் திட்டஎரி
          கொற்றவர் பற்ற மொழியா
     மாலொன்று மங்கையர்க் கரசியார் படுதுயரின்
          வலிகண்டு சென்று தவிர
     வஞ்சப் பெருங்கூனும் வெப்பந் தவிர்த்தருளு
          மதுரவா சகமதகு பாய்
     காலொன்று மாநதி பரந்துவரு கழனியிற்
          கலையெனக் குவளை களைவார்
     கண்டுவெரு வித்தங்கள் கைநெரித் தருகுமிடை
          கன்னலங் காடு மறையச்
     சேலொன்று விளையாடு சீகாழி நாடாளி
          செங்கீரை யாடி யருளே

     செழுநான் மறைத் தலைவ திருஞான சம்பந்த
          செங்கீரை யாடி யருளே.
     சிந்துற் றெழுமாமதி அங்கித் - திரளாலே
          தென்றற்றரு வாசமிகுந்துற் - றெழலாலே
     அந்திப் பொழுதாகிய கங்குற் - றிரளாலே
         அன்புற்றெழு பேதை மயங்கித் - தனியானாள்
     நந்துற்றிடு வாரியை மங்கத் - திகழாயே
         நஞ்சத் தொளிர் வேலினையுந்திப் - பொருவேளே
     சந்தக்கவி நூலினர் தஞ்சொற் - கினியோனே
         சண்பைப்பதி மேவிய கந்தப் - பெருமாளே.   (திருப்புகழ்)