வடிவம். அம்பாள் சந்நிதிக்கு வெளியே மண்டபத்தில் மேற்புறத்தில் பன்னிரண்டு ராசிகளின் உருவங்களும் உரிய கட்டமைப்பில் வடிக்கப்பட்டுள்ளன.
மூலவர் சந்நிதி கிழக்கு நோக்கியது. சுயம்புத் திருமேனி மூலலிங்கம் - சற்று உயரமாக உள்ளது. பெயருக்கேற்பத் திருமேனி முழுவதிலும் கண்கள் போன்று பள்ளம் பள்ளமாக உள்ளன. மனநிறைவான தரிசனம். இந்திரனின் சாபம் இங்கு நீங்கியதாக ஐதீகம். ஆதலின் திருமணமாகாதோர் இங்கு வந்து சுவாமிக்கு மாலை சார்த்தி வழிபடுதலும், அவ்வாறு வழிபட்டோர் திருமணமான பின்னரும் வந்து மாலை சார்த்துதலும் இங்கு மரபாக இருந்து வருகின்றது.
மூலவர் மண்டபத்தில் சந்திரசேகர் திருமேனி உள்ளது. அடுத்து அம்பலவாணர் தரிசனம். பிரதோஷ நாயகர், அஸ்திரதேவர், சண்டேசுவரர், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வயானை, சோமாஸ்கந்தர், விநாயகர் முதலிய உற்சவ மூர்த்தங்கள் உள்ளன.
கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை உளர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. கோயிலின் எதிரில் உள்ள தீர்த்தக் கரையில் விநாயகர், முருகன் சந்நிதிகள் உள்ளன.
கார்த்திகை ஞாயிறு நாள்களில் சுவாமி புறப்பாடு இங்கு விசேஷமாக நடைபெறுகிறது. இங்குள்ள துர்க்கை சந்நிதி விசேஷமானது - பிரத்யட்ச தெய்வமாகப் போற்றப்படுகிறது. சுவாமிக்குத் தீபாராதனை செய்து அடுத்து அம்பாளுக்கும் தீபாராதனை செய்து அதற்குப்பிறகே திருநீறு குங்குமம் வழங்கும் மரபு இக்கோயிலில் இருந்து வருகின்றது. நாடொறும் ஐந்து கால பூஜைகள்.
‘விண்ணவருக்காய் வேலையுணஞ்சம் விருப்பாக உண்ணவனைத் தேவர்க்கமுதீந் தெவ்வுல கிற்கும் கண்ணவனைக் கண்ணார்திகழ் கோயிற் கனிதன்னை நண்ணவல்லோர்கட்கு இல்லை நமன்பால் நடலையே.” (சம்பந்தர்) பூமருவு பொய்கைகளும் புனல்மருவு நதிகளுந்தண் பொதும்பர் சேர்ந்து காமருவு மருதமுஞ்சூழ் திருக்கண்ணார் கோயிலிட்கட் கடவுட்கோவும் பூமருவி மூவடிமண் கேட்டவரும் கவுணியரும் போற்றவாய்ந்த தேமருவு கொன்றையந்தார் திகழ்கண்ணாயிரர் பதங்கள் சிந்தை செய்வாம். |