தருநாகத்தவர் முதல் எவ்வுயிருந் தழையத் தழையும் பொழிலில் திகழும் திருநாரைப் பதி வளருங் கருணைத் திரிபுரசுந்தரி சரணம் பணிவாம்.’ ‘தன்னைக் குறித்த திருப்பணியுஞ் சான்றோர் பிறர்க்குச் செயும் பணியும் முன்னைத் தனது வழிபாடு முடிப்போர்க் கினிதா முடிப்போனை என்னை நினைத்துத் தனது பணி யியற்றப் பணித்த இபமுகனைப் புன்னைத் தருசூழ் திருநாரைப் பொல்லா முதல்வன் தனைப்பணிவாம்.’ (தலபுராணம்) ‘என்னை நினைந்தடிமை கொண்டென் இடர் கெடுத்துத் தன்னை நினையத் தருகின்றான் - புன்னை விரசுகமழ் சோலை வியன் நாரையூர் முக்கண் அரசுமகிழ் அத்தி முகத்தான்.’ (திருநாரையூர் இரட்டைமணி மாலை) ‘முகில்போல் பொழியும் மூவர் திருமுறை கண்டெடுக்கச் சோழேசன் முக்காலத்தின் இயல்புணர்ந்த முத்தர் நம்பி யாண்டார்தாள் புகழ ஆங்கே நிவேதித்த பொற்பார் மோதகாதியெலாம் பொருந்தத் துதிக்கை யாலெடுத்துப் புசிக்க அவர்தாம் பின்கேட்க மகிழைங்கரத் தோன் கனகசபை வாயுதிக்கிலிருக்கு தென்றே வந்தே யருளத் திருமுறையால் வைய மெல்லாம் வாழவைக்கும் திகழு நாரையூர்க்குமார சிறியேஞ் சிற்றில் சிதையேலே தெய்வக் குறப் பெண் மணவாளா சிறியேஞ் சிற்றில் சிதையேலே.’ (காஞ்சி சிதம்பர முனிவர் பாடியுள்ள சுப்பிரமணியக் கடவுள் க்ஷேத்திரக்கோவை பிள்ளைத் தமிழ்) ‘தீவினையாயின் தீர்க்க நின்றான் திருநாரையூர் மேயான் பூவினைமேவு சடைமுடியான் புடைசூழப் பலபூதம் ஆவினிலைந்துங் கொண்டாட்டு கந்தானடங்கார் மதின்மூன்றும் ஏவினையெய் தழித்தான் கழலே பரவா எழுவோமே.’ (சம்பந்தர்) |