‘பண்ணி னான்மறை பாடலோ டாடலும் எண்ணிலார் புரமூன் றெரிசெய்ததும் நண்ணினார் துயர் தீர்த்தலு நாரையூர் அண்ணலார் செய்கை அம்ம அழகிதே.’ (அப்பர்) -மேனாட்டுந் தேரையூர்ச் செங்கதிர் போல் செம்மணிகள் நின்றிலங்கும் நாரையூர் மேவு நடுநிலையே. (அருட்பா) “மருப்பை யொரு கைக்கொண்டு காரையூர் மன்னும் பொருப்பை யடிபோற்றத்துணிந்தால் - நெருப்பை அருந்த வெண்ணுகின்ற எறும்பன்றே யவரை வருத்த வெண்ணுகின்ற மலம்.” அஞ்சல் முகவரி ;- அ/மி. சௌந்தரநாதசுவாமி திருக்கோயில் (சுயம்பிரகாசநாதசுவாமி தேவஸ்தானம்) திருநாரையூர் & அஞ்சல் - 608 303 (வழி) லால்பேட்டை - காட்டுமன்னார்கோயில் வட்டம் கடலூர் மாவட்டம். 88/34. திருக்கடம்பூர் மேலைக்கடம்பூர், மேலக்கடம்பூர். | சோழநாட்டு (வடகரை)த் தலம். மக்கள் பேச்சு வழக்கில் மேலக்கடம்பூர் என்று வழங்குகிறது. கருவறை அடிப்பாகம் குதிரை பூட்டிய தேர் போன்ற அமைப்பில் (சக்கரங்களுடன்) உள்ள திருக்கோயில்- கரக்கோயில். ‘கடம்பு’ தலமரமாதலின் கடம்பூர் ஆயிற்று. (1) சிதம்பரம் - எய்யலூர் (வழி) காட்டுமன்னார்குடி பேருந்தில் சென்று இத்தலத்தையடையலாம். |