100/46. திருப்புறம்பயம் திருப்பிறம்பியம் | சோழநாட்டு (வடகரை)த் தலம். மக்கள் திருப்பிறம்பியம் என்றழைக்கின்றனர். பேருந்துப் பலகையும் அவ்வாறுதான் உள்ளது. கும்பகோணம் - திருவையாறு சாலையில், புளியஞ்சேரி சென்று, அங்குச் சாலையில் திருப்பிறம்பியம் என்று வழிகாட்டிப் பலகை உள்ள இடத்தில் அத்திசையில் சென்றால் இன்னம்புர் (இன்னம்பர்) வரும். அடுத்து 3 கி.மீ. சென்றால் திருப்புறம்பயம் உள்ளது. கும்பகோணத்திலிருந்து நகரப் பேருந்து உள்ளது. 10 கி.மீ. தொலைவு. பிரளயத்திற்குப் புறம்பாய் இருந்தமையால் (புறம்பு - அயம் திருப்புறம்பயம் என்ற பெயர் பெற்றது. வேறு பெயர்கள் :- கல்யாண மாநகர், புன்னாகவனம் ஆதித் தேஸ்வரம் என்பன. இறைவன் - சாக்ஷிநாதேஸ்வரர், சாஷீஸ்வரர், புன்னைவனநாதர் இறைவி - கரும்பன்ன சொல்லி, இக்ஷு வாணி. தலமரம் - புன்னை தீர்த்தம் - பிரமதீர்த்தம். |