“பண்டைவினைகள் பறியநின்ற அண்டமுதல்வன் அமலன் இடமாம் இண்டைகொண்டு அன்புஇடையறாத தொண்டர் பரவுஞ் சோற்றுத் துறையே." (சுந்தரர்) - கொண்டியல்பின் வேற்றுத் துறையுள் விரவாதவர் புகழுஞ் சோற்றுத் துறையுட் சுகவளமே. (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. சோற்றுத்துறைநாதர் திருக்கோயில் திருச்சோற்றுத்துறை - அஞ்சல் (வழி) கண்டியூர் - S.O. 613 202 திருவையாறு வட்டம் - தஞ்சை மாவட்டம். சோழநாட்டு (தென்கரை)த் தலம். தஞ்சாவூர் - திருவையாறு பேருந்துச்சாலையில் உள்ள தலம். திருக்கண்டியூருக்கு மிகவும் அருகில் (1 கி.மீ) உள்ளது. வேதி - பிரமன். பிரமன் பூசித்த தலமாதலின் வேதிகுடி என்ற பெயர் பெற்றது. வேதம் வழிபட்டதாகவும் கூறுவர். ‘விழுதிகுடி’ என்பது மருவி ‘வேதிகுடி’ ஆயிற்று என்பர் ஒருசாரார். திருவையாற்றை மையமாகக் கொண்ட சப்தஸ்தானங்களுள் இத்தலமும் ஒன்று. இறைவன் - வேதபுரீசுவரர், வாழைமடுநாதர் இறைவி - மங்கையர்க்கரசி தலமரம் - வில்வம் தீர்த்தம் - வேததீர்த்தம். (கோயிலின் எதிரில் உள்ளது.) தலவிநாயகர்- வேத விநாயகர் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது. |