“நன்மைபெருகு அருள்நெறியே வந்தணைந்து நல்லூரில் மன்னுதிருத் தொண்டனார் வணங்கி மகிழ்ந்து எழும்பொழுதில் உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம் என்று அவர்தம் சென்னிமிசைப் பாதமலர் சூட்டினான் சிவபெருமான்.” (பெ. புரா) - சீலத்தர் சொல்லூரடியப்பர் தூய முடி மேல்வைத்த நல்லூர் அமர்ந்த நடுநாயகமே. (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் திருநல்லூர் கிராமம் - அஞ்சல் (வழி) சுந்தரப்பெருமாள் கோயில் வலங்கைமான் வட்டம் திருவாரூர் மாவட்டம். 614 208. 138/21. ஆவூர்ப்பசுபதீச்சுரம் ஆவூர் | சோழநாட்டு (தென்கரை)த் தலம். ஊர் - ஆவூர். கோயில் - பசுபதீச்சுரம். (1) கும்பகோணம் - மன்னார்குடிச்சாலையில் வலங்கைமான் வந்து அங்கிருந்து கோவந்தகுடி வழியாக இத்தலத்தை யடையலாம். (2) கும்பகோணத்திலிருந்து பேருந்துகள் உள்ளன. கோச் செங்கட் சோழன் திருப்பணி - மாடக்கோயில். வசிட்டரால் சாபம் பெற்ற காமதேனு, பிரமன் அறிவுரைப்படி உலகிற்கு வந்து இங்கு வழிபட்டுச் சாபம் நீங்கியதலம். (காமதேனு உலகிற்கு வந்த இடம். கோ+வந்த+குடி= கோவந்தகுடி ஆயிற்று.) கொடிமரத்தில் பசு, சிவலிங்கத்தின் மீது பால் சொரிந்து வழிபடும் சிற்பமுள்ளது. மணிகூடம், அசுவத்தவனம் என்பன இத்தலத்தின் வேறு |