தவர்வாள் தோமர சூலம் தரியாக் காதிய சூருந் தணியாச் சாகர மேழும் - கிரியேழும் சருகாக் காய்கதிர் வேலும் பொருகாற் சேவலும் நீலம் தரிகூத் தாடிய மாவுந் - தினைகாவல் துவர்வாய்க் கானவர் மானும் அரநாட்டாளொடு தேனும் துணையாத் தாழ்வற வாழும் - பெரியோனே துணையாய்க் காவல்செய்வாயென் றுணராப்பாவிகள்பாலும் தொலையாப் பாடலை யானும் - புகழ்வேனோ பவமாய்த் தானது வாகும் பனைகாய்த் தேமணம் நாறும் பழமாய்ப் பார்மிசை வீழும் - படிவேதம் படியாப் பாதகர் பாயன் றியுடாப் பேதைகள் கேசம் பறிகோப் பாளிகள் யாரும் - கழுவேறச் சிவமாய்த் தேனமு தூறும் திருவாக் காலொளி சேர்வெண் திருநீற் றாலம ராடும் - இறையோனே செழுநீர்ச் சேய்நதி யாரங் கொழியாக் கோமளம் வீசும் திருவோத் தூர்தனில் மேவும் பெருமாளே. - ஓகையிலா “வீத்தூர மாவோட மெய்த்தவர்கள் சூழ்ந்த திரு வோத்தூரில் வேதாந்த உண்மையே.” - (அருட்பா) |