- ஒருவந்தர் மாகாளங்கொள்ள மதனைத் துரத்துகின்ற மாகாளத் தன்பர் மனோலயமே. (அருட்பா) “காளையர்கள் ஈளையர்கள் ஆகிக் கருமயிரும் பூளையெனப் பொங்கிப் பொலிவழிந்து - சூளையர்கள் ஓகாளஞ் செய்யாமுன் நெஞ்சமே உஞ்சேனை மாகாளங் கைதொழுது வாழ்த்து” (ஐயடிகள் காடவர்கோன்) அஞ்சல் முகவரி :- அ/மி. மாகாளேஸ்வரர் திருக்கோயில் கோயில் திருமாளம் - பூந்தோட்டம் அஞ்சல் - 609 503 நன்னிலம் வட்டம் - திருவாரூர் மாவட்டம். 173/56. திருமீயச்சூர் 174/57. திருமீயச்சூர் இளங்கோயில் | சோழநாட்டு (தென்கரை)த் தலம். மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் பேரளம் வந்து, இடப்புறமாகப் பிரியும் காரைக்கால் பாதையிற் செல்லாமல், வலப்புறமாகத் திரும்பும் திருவாரூர்ச் சாலையில் திரும்பிச் சிறிதுதூரம் சென்றதும், கடைவீதியில் - கடைவீதிக்கு இணையாகப் பின்புறமாகப் பிரிந்து செல்லும் ‘கம்பூர்’ பாதையில் சென்று - ரயில்வே கேட்டைத் தாண்டி, சுமார் 2 கி.மீ. சென்றால் மீயச்சூரை அடையலாம். சரளைக்கல்பாதை, கோயில்வரை வாகனங்கள் செல்லும். இக்கோயில் திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீனத்திற்குரியது. மீயச்சூர் கோயிலுக்குள்ளேயே இளங்கோயில் உள்ளது. மீயச்சூர் கோயில் சூரியன் வழிபட்டது. இக்கோயில் விமானம் கஜப்பிரஷ்ட அமைப்புடையது. இறைவன் - மேகநாதர், முயற்சிநாதர் இறைவி - சௌந்தர நாயகி, லலிதாம்பாள் தலமரம் - வில்வம் தீர்த்தம் - சூரியதீர்த்தம் |