பக்கம் எண் :

578 திருமுறைத்தலங்கள்


     “வாடிநீர் வருந்தாதே மனிதர்காள்
     வேடனாய் விசயற்கு அருள் செய்த வெண்
     காடனார் உறைகின்ற கருவிலிக்
     கோடு நீள் பொழில் கொட்டிட்டை சேர்மினே”     (அப்பர்)

                                         - “இந்நிமிடஞ்
     சிந்துங் கருவிலியின் திண்மை யென்று தேர்ந்தவர்கள்
     முந்துங் கருவிலி வாழ் முக்கண்ணா.”           (அருட்பா)


அஞ்சல் முகவரி :-

     
அ/மி. சற்குண நாதேஸ்வரர் திருக்கோயில்
     கருவேலி. கூந்தலூர் அஞ்சல் - எரவாஞ்சேரி - S.O.
     கும்பகோணம் R.M.S.
     தஞ்சை மாவட்டம் 605 501.

181/64. பேணுபெருந்துறை

திருப்பந்துறை

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     கும்பகோணம் - காரைக்கால் பேருந்துப் பாதையில் அமைந்துள்ள
தலம். (நாச்சியார் கோயிலையடுத்து எரவாஞ்சேரி பாதையில் 1 கி.மீ.
தொலைவில் உள்ளது.) கோயில் வரை வாகனங்கள் செல்லும்.

     அரிசிலாற்றின் கரையிலுள்ள ஊர். ‘திருப்பெருந்துறை’ யினின்றும்
வேறுபாடறிய ‘பேணு’ என்னும் அடைசேர்த்துப் ‘பேணு பெருந்துறை’ என்று
வழங்கப்படுகிறது.

     இறைவன் - சிவானந்தேஸ்வரர், பிரணவேஸ்வரர்.
     இறைவி - மங்களாம்பிகை, மலையரசி.
     தலமரம் - வன்னி.
     தீர்த்தம் - மங்கள தீர்த்தம். எதிரில் உள்ளது.

     சம்பந்தர் பாடல் பெற்றது.