திருப்புகழ் நசையொடு தோலுந் தசைதுறு நீரும் நடு நடுவே யென் - புறுகீலும் நலமுறு வேயொன்றிட இரு கால்நன் றுற நடையாருங் - குடிலூடே விசையுறு காலம் புலனெறியேவெங் கனலுயிர் வேழந் - திரியாதே விழுமடியார் முன்பழு தறவேள்கந் தனுமென வோதும் - விறல்தாராய் இசையுறவே யன்றசை வறவூதும் எழிலரிவேழம் - எனையாளென் றிடர் கொடுமூலத் தொடர்வுடனோதும் இடமிமையாமுன் - வருமாயன் திசைமுக னாருந் திசைபுவி வானுந் திரிதர வாகுஞ் - சிவன்மூதூர் தெரிவையர் தாம்வந் தருநடமாடுந் திருவல மேவும் - பெருமாளே. -பார்த்துலகில் இல்லமெனச் சென்றிரவாதவர் வாழும் வல்லம் மகிழ்வன்பர் வசித்துவமே. (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. வில்வநாதீஸ்வரர் திருக்கோயில் திருவலம் & அஞ்சல் (வழி) இராணிப்பேட்டை - குடியாத்தம் வட்டம். வேலூர் மாவட்டம் - 632 515. 11. திருமாற்பேறு திருமால்பூர் | தொண்டை நாட்டுத் தலம். மக்கள் வழக்கில் ‘திருமால்பூர்’ என்று வழங்குகின்றது. (1) சென்னையிலிருந்து நேரே பேருந்து செல்கிறது. ஆனால் அடிக்கடி இல்லை. நேரம் விசாரித்துச் செல்ல வேண்டும். |