இத்தலத்தை இங்குள்ள மக்கள் “குருவிராமேஸ்வரம்” என்றும் கூறுகின்றனர். திருவாரூரிலிருந்து கடைத் தெரு வழியாகக் ‘கேக்கரை’ ரோடில் வந்து, ரயில்வே லெவல்கிராசிங்கைத் தாண்டி, ‘கேக்கரை’யை அடைந்து; அங்கிருந்து அதே சாலையில் மேலும் 1 கி.மீ. சென்று சிறிய பாலத்தைத் தாண்டி, சிறிது தூரம் சென்று, அங்கு இரண்டாகப் பிரியும் பாதையில் இடப்பக்கமாகச் செல்லும் பாதையில் 1 கி.மீ. சென்றால் ஊரையடையலாம். (கேக்கரை ரோடினை மக்கள் ராமகே ரோடு என்றும் கூறுகின்றனர்.) பேருந்து ஊர் வரை செல்லும். சரளைக்கல் பாதைதான் (Single Road) மிக அதிக அகலமான பேருந்தாக இருப்பின் செல்வதற்குச் சிரமப்படும். ஊர்த் தொடக்கத்திலேயே கோயில் உள்ளது. மூர்க்கரிஷி பூசித்த தலம். நகரத்தார் திருப்பணியுடன் கோயில் நன்கு பொலிவுடன் காட்சி தருகிறது - கிழக்கு நோக்கிய சந்நிதி. திருவாரூர்க் கோயிலோடு இணைந்தது. இறைவன் - முக்கோணநாதர், திரிநேத்ர சுவாமி, முக்கூடல்நாதர். இறைவி - அஞ்சனாட்சி, மைம்மேவு கண்ணி. தீர்த்தம் - முக்கூடல் தீர்த்தம், கோயில் எதிரில் உள்ளது. (இத்தீர்த்தம் திரிவேணி சங்கமத்திற்கு ஒப்பாகச் சொல்லப்படுகிறது.) (இறைவன் பெயர், சம்ஸ்கிருதப் பெயரை நோக்கத் தமிழில் ‘முக்கண்நாதர்’ என்றிருக்க வேண்டும். ஆனால் பேச்சு வழக்கில் சிதைவுற்று- தொடர்பே இல்லாமல் ‘முக்கோணநாதர்’ என்று வழங்குகிறது. அப்பர் பாடல் பெற்றது. இக்கோயில் தொடர்பாகச் சொல்லப்படும் வரலாறு :- “ஜடாயு இறைவனை நோக்கித் தவம் செய்து, தனக்கு இறுதி எப்போது என்று கேட்க, இறைவன் அவரைப் பார்த்து, “இராவணன் சீதையை எடுத்து வரும் நேரத்தில் நீ தடுப்பாய். அப்போது அவன் உன் சிறகுகளை வெட்ட நீ வீழ்ந்து இறப்பாய்” என்றாராம். அது கேட்ட ஜடாயு “பெருமானே ! அப்படியானால் நான் காசி, கங்கை, இராமேஸ்வரம், சேது முதலிய தீர்த்தங்களில் மூழ்கித் தீர்த்தப் பலனை அடைய முடியாமற்போகுமே என் செய்வேன்” என்று வேண்ட, இறைவன் மூக்கூடல் தீர்த்தத்தை உண்டாக்கி அதில் மூழ்குமாறு பணிக்க அவரும் |