வழிபட்ட தலம். ஆகவே பாதாளீச்சுரம் என்று பெயர் பெற்றது. சுகலமுனிவர் வழிபட்டது. நகரத்தார் திருப்பணி பெற்றுக்கோயில் சிறப்பாகவுள்ளது. சர்ப்ப தோஷ நிவர்த்தித் தலம். இறைவன் - சர்ப்பபுரீஸ்வரர், நாகநாதர் இறைவி - அமிர்தநாயகி தலமரம் - மா தீர்த்தம் - நாக தீர்த்தம் (கோயிலுக்கு எதிரில் உள்ளது) சம்பந்தர் பாடல் பெற்றது. முகப்பு வாயிலைத் தாண்டியுட் புகந்தால் வலப்பால் அம்பாள் சந்நிதி. உட்கோபுர வாயிலைக் கடந்தால் நேரே மூலவர் தரிசனம். உள்பிராகாரத்தில் சூரியன், தலவிநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, துர்வாசர், சாஸ்தா, காலபைரவர், சனிபகவான், நவக்கிரகம், நால்வர், சந்திரன் சந்நிதிகள் உள்ளன. உள்மண்டபத்தில் வலப்பால் நடராச சபை. மூலவர் உள்ள இடம் புற்றாக அமைந்துள்ளது. இடப்பால் தனஞ்சயர் உருவமுள்ளது. நாகலிங்கப் பிரதிஷ்டை காணப்படுகிறது. மூலவர் - சுயம்பு. முப்பிரிவாக அமைத்து செப்புத் தகட்டால் ஒன்றாகப் பொருத்தப்பட்டு விளங்குகிறது. இது குறித்த வரலாறு:- “சுகல முனிவர் வளர்த்த காமதேனு பால் சொரிந்து சிவலிங்கத்தை வழிபடுவதைக் கண்டு, முனிவர் தமக்குப் பால் குறைந்து விடுமே என்று கோபித்து அடித்தார். அதுகண்டு வருந்திய காமதேனு ஓடிச்சென்று, வழிபட்டதனால் தனக்கு நேர்ந்த நிலையை உணர்த்துவது போலச் சிவலிங்கத்தின்மீது முட்டி ஓடி - (வடக்கு வீதியில் உள்ள) பசுபதி தீர்த்தத்தில் விழுந்திறந்தது. அப்போது இறைவன் காட்சி தந்து பசுவை உயிர்ப்பித்தார்.” அக்காமதேனு முட்டியதால் மூலத்திருமேனி மூன்று வடுக்களை யுடையதாய் - முப்பிரிவாக, மேற்குறித்துள்ளவாறு காட்சி தருகின்றது. சுயம்பாதலின் மேற்புறம் சொர சொரப்பாகவுள்ளது. பாம்பு வழிபட்டமையால் பாம்பு போன்ற வடுவும் முன்புறத்தில் உள்ளது. ஆதிசேஷன், தனஞ்சயர் வடிவில் தோன்றி, பிரதிஷ்டை செய்து இறைவனை வழிபட்ட நாள் ஐப்பசி முதல் நாளாகும். எனவே அந்நாளில் நம் உணவு போலவே சோறு, குழம்பு, காய்கறி வகைகள், வடை, பாயசம் சமைத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து நிவேதித்தால் தோஷம் நிவர்த்தியாகிறது என்ற நம்பிக்கையில் சிறப்பு செய்து வழிபடுகின்ற வழக்கம் இன்றுமுள்ளது. பச்சை திராட்சையும், மாங்கனியும், மாம்பழச் சாறும் இங்குச் சிறப்பு நிவேதனம். |