பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 705


     வெண்ணிலாக்கண்ணி

    “வில்வவனமேவு நாதர் வெண்ணிலாவே - எங்கள்
     விமலர்தமை ஏத்துவம் வா வெண்ணிலாவே
     நம்பர்பதம் அபயமென வெண்ணிலாவே - நீதான்
     நண்ணியுற்ற நலமறிந்தோம் வெண்ணிலாவே.
     நாட்டுக்கெலாம் நம்பனென வெண்ணிலாவே - அந்த
     நம்பனுறை கொள்ளம் பூதூர் வெண்ணிலாவே.”
            (கொள்ளம்பூதூர் வைத்தியலிங்க முதலியார் பாடியது)

                                     - ‘தோய்வுண்ட
     கள்ளம்பூதாதி நிலைகண்டு உணர்வு கொண்டவர்சூழ்
     கொள்ளம்பூதூர் வான்குல மணியே’ (அருட்பா)

அஞ்சல் முகவரி:-

     அ/மி. வில்வாரண்யேசுவரர் திருக்கோயில்
     திருக்களம்பூர் - 622 414
     திருவாரூர் மாவட்டம்.
231/114. பேரெயில்

ஓகைப்பேரையூர் - வங்காரப்பேரையூர்

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     பேரையூர் என்ற பெயரில் பலவூர்களிருப்பதால் மக்கள் இப்பதியை
ஓகைப்பேரையூர் என்று வழங்குகின்றனர். வங்காரப் பேரையூர் என்ற
பெயரும் வழங்குகிறது.

     1) திருவாரூர் - மன்னார்குடிச் சாலையில் கமலாபுரம் அடுத்த மூலங்குடி
வந்து அங்கிருந்து இத்தலத்தையடையலாம்.
     2) மாவூர்ரோடு - வடபாதி மங்கலம் சாலை வழியாகவும் இத்தலத்திற்கு
வரலாம்.

தலம் - 45