“கோலக் காதிற் குழையாலே - கோதிச் சேர்மைக் குழலாலே ஞாலத்தாரைத் துயரே ; செய் - நாரிக்காசைப் படலாமோ மேலைத் தேவர்க் கரியோனே - வீரச் சேவற் கொடியோனே காலப் பாசத் துயர் தீராய் கானப்பேரிற் பெருமாளே.” (திருப்புகழ்) பதினோராம் திருமுறை முலைநலஞ்சேர் கானப்பேர் முக்கணா னென்னு முலைநலஞ்சேர் மொய்சடையானென்னு - முலைநலஞ்சேர் மாதேவா வொன்று வளர்கொன்றை வாய்சோர மாதேவா சோரல் வளை. (கபிலதேவர்) நிலைத்திவ் வுலகனைத்து நீரேயாய் நின்றீர் நிலைத்திவ் வுலகனைத்து நீரே - நிலைத்தீரக் கானப்பே ரீர்கங்கை சூடினீர் கங்காளீர் கானப்பே ரீர்கங்கை யீர். (பரணத்தேவர்) -“சேடான வானப் பேராற்றை மதியை முடிசூடுங் கானப்பேரானந்தக் காளையே.” (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. காளேஸ்வரர் திருக்கோயில் காளையார் கோயில் & அஞ்சல் - 623 551 சிவகங்கை மாவட்டம். பாண்டிய நாட்டுத் தலம். பாண்டிய நாட்டுத் தலங்களுள் மூவர் பாடலும் பெற்றது. இத்தலத்திற்கு மதுரையிலிருந்து செல்லலாம். இத்தலம் மதுரை- மானாமதுரை பாதையில் உள்ள புகைவண்டி நிலையம். இவ்வூர் (1) பழையூர் (2) புதூர் (3) கோட்டை (4) நெல் முடிக்கரை என நான்கு |