பக்கம் எண் :

864 திருமுறைத்தலங்கள்


                         திருஏசறவு

     நானேயோ தவம் செய்தேன்
          சிவாயநம எனப்பெற்றேன்
     தேனாய் இன்னமுதமுமாய்த்
          தித்திக்கும் சிவபெருமான்
     தானேவந் தெனதுள்ளம்
          புகுந்தடியேற் கருள்செய்தான்
     ஊனாரும் உயிர்வாழ்க்கை
          ஒறுத்தன்றே வெறுத்திடவே

                        அற்புதப்பத்து

     
மாடும் சுற்றமும் மற்றுளபோகமும்
          மங்கையர் தம்மோடும்
     கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு
          குலாவியே திரிவேனை
     வீடுதந் தென்றன் வெந்தொழில் வீட்டிட
          மென்மலர்க் கழல் காட்டி
     ஆடுவித்தென தகம் புகுந்தாண்டதோர்
          அற்புதம் அறியேனே

                      சென்னிப்பத்து

     
அட்டமூர்த்தி அழகன் இன்னமு
          தாய ஆனந்த வெள்ளத்தான்
     சிட்டன் மெய்ச்சிவலோக நாயகன்
          தென்பெருந்துறைச் சேவகன்
     மட்டுவார் குழல்மங்கை யாளையோர்
          பாகம் வைத்த அழகன்தன்
     வட்டமாமலர்ச் சேவடிக்கண் நம்
          சென்னி மன்னி மலருமே.

                       திருவார்த்தை

     
வந்திமை யோர்கள் வணங்கியேத்த
          மாக்கருணைக்கடலாய் அடியார்
     பந்தனை விண்டற நல்கும்எங்கள்
          பரமன் பெருந்துறை ஆதிஅந்நாள்
     வந்து திரைக்கடலைக் கடந்தன்று
          ஓங்குமதில் இலங்கை அதனில்
     பந்தணை மெல்விர லாட்கருளும்
          பரிசறிவார் எம்பிரானாவாரே.