ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம் பாழுக்கிறைத்தேன் பரம் பரனைப் பணியாதே ஊழிமுதல் சிந்தாத நன்மணி வந்தென் பிறவித் தாழைப் பறித்தவா தோணோக்கம் ஆடாமோ (திருத்தோணோக்கம்) கொந்தணவும் பொழிற் சோலைக் கூங்குயிலே இதுகேள் நீ அந்தணனாகி வந்திங்கே அழகிய சேவடி காட்டி எந்தமராம் இவன்என்று இங்கு என்னையும் ஆட் கொண்டருளும் செந்தழல் போல் திருமேனித் தேவர்பிரான் வரக்கூவாய். (குயிற்பத்து) அருளாது ஒழிந்தால் அடியேனை அஞ்சேல் என்பார் ஆர்இங்குப் பொருளா என்னைப் புகுந்தாண்ட பொன்னே பொன்னம் பலக்கூத்தா மருளார் மனத்தோடுனைப் பிரிந்து வருந்துவேனை வாஎன்று உன் தெருளார் கூட்டம் காட்டாயேல் செத்தே போனால் சிரியாரோ. (கோயில் மூத்த திருப்பதிகம்) உருத்தெரியாக்காலத்தே உள்புகுந்து என்உளம் மன்னிக் கருத்திருத்தி ஊன்புக்குக் கருணையினால் ஆண்டுகொண்ட திருத்துருத்தி மேயானைத் தித்திக்கும் சிவபதத்தை அருத்தியினால் நாயடியேன் அணிகொள்தில்லை கண்டேனே. (கண்டபத்து) என்னால் அறியாப் பதம் தந்தாய் யான் அறியாதே கேட்டேன் உன்னால் ஒன்றும் குறைவில்லை உடையாய் அடிமைக்கு ஆர் என்பேன் பன்னாள் உன்னைப் பணிந்தேத்தும் பழைய அடியரொடுங் கூடாது என்நாயகமே பிற்பட்டிங்கு இருந்தேன் நோய்க்கு விருந்தாயே (ஆனந்தமாலை) |