2. தீன் நிலை
கண்ட படலம்
இனி மறைவாக
வேண்டாம்
வானோர்கள்
போற்றுகிற உயர்நபியார் பட்டமது வழங்கப்பட்டும்
போனஇரட்(டு) இரண்டாண்டில் போனவராம் செபுறயீல் புவிமேல் வந்து
“தேனவரே! இறைவனவன்தெரிவித்த செய்திஒன்று தெரியச் சொல்வேன்
ஏனினிமேல் மறைவாக இயம்புகிறீர்? எல்லாரும் இணங்கச் செய்வீர்”. 1
முத்தத்திர்
எனும் ஆயத்து ஓதினார்
எனக்கூறி
எனைஈங்கே அவன்தானே அனுப்பியுளான் இதனைக்கூற
வனப்புள்ள திருக்குர்ஆன் எழுபத்து நான்காம்சீர்
வழங்கியுள்ள
நினைக்க அரு “முத்தத்திர்” எனும் உரையை மன்னவர்பால்
நீட்டித்தந்தே
இணக்கமுரைத் தவராக வானின்மேல் நோக்கியராய்
எழிலாய்ப்போனார்; 2
இந்த முறை
என்ன முறை?
மறைவாகத்
தொழுதவர்கள் எல்லாரும் மறைகேட்டு மகிழ்ந்து
சென்று
நிறைவாக எவர்க்குமுனும் நேர்மையுளான் புகழ்கூறி
நேர் வணங்கும்
முறைவழியே வணங்கிவரக் கண்டவர்கள் எலாம்கூடி முன்னர்த்தோன்றி
“முறையில்லா இறைவணக்க முறைஎன்ன முறை?” என்றே முறைத்துப்
பார்த்தார். 3
இவரா நபி?
உருவணக்கம்
உடையவராம் அரபியர்கள் இது கண்டாங்(கு) ஒன்று கூடித்
“திருவணக்கம் என்கின்றீர் காணுகிற எமக்கெல்லாம் சிரிப்பே தோன்ற
ஒருவணக்கம் தந்தவனை நபிஎன்று போற்றுகிறீர் உண்மை இல்லா
இருள்மகனை ஒளிமகனார் எனவாழ்த்தல் நன்றில்லை”
என்று கூறி; 4
இவனால்
நமக்குத் தீமையே வரும்
எதிர்த்தவர்கள்
எல்லாரும் ஒருமுகமாய் வெறுப்பகத்தால் இணைந்து பேசிப்
“புதிர்போடும் இங்கிவனைப் புரட்சி செயவிட்டு விட்டால் புகழே மாயும்
பதில் கேட்டால் “ஓரிறைவன் உருவமிலான்” எனக்கூறிப் பசப்புகின்றான்
விதிப்படியே போகட்டும் எனவிட்டால் நமக்குத் தீவினையே”
என்றார் 5
|