முன்வருவார்க்குப்
பதவி தருவேன்
அன்னவன்
தன்னை மாய்க்க ஆருக்கு வீர முண்டோ
அன்னவர் தமக்கு வேண்டும் அரும்பொருள் எதையும் ஈந்து
மன்னவர் அவரே என்னும் மாண்புறு பதவி ஈவேன்
என்னவே அபூசகுல்தான் இயம்பியே முழங்கி நின்றான். 6
வீர இளைஞரே
இல்லையா?
“பணத்தொடும் பதவி தானும் பரிசாகத் தருவேன் கெட்ட
மனத்தவன் ஆன அந்த மகம்மது தன்னைக் கொன்றால்
எனத்தகாச் சொற்கள் சொன்ன இழிந்தபுன் கயவன் நந்தம்
இனத்தவர் தமக்குள் வீர இளைஞரும் இலையா?” என்றான். 7
இதோ நான்
இருக்கிறேன் என்றார் உமறு
“ஏன் இல்லை?” என்று கேட்டாங்(கு) எழுந்துநேர் உமறு நின்றார்
தேன் இல்லை உயிர்எமக்குத் தேயத்தில் அச்சம் இல்லை
வான் இல்லை - அதற்கு மேலும் வலிய ஊர்ஆள் ஆனாலும்
ஊன் உடல் சிதையத் தாக்கி உயிரையும் மாய்ப்பேன்”
என்றே; 8
ஆரவாரத்தோடு உமறு போனார்
இடையிலோர்
குறுவாள் கையில் ஏந்திய ஈட்டி யோடும்
நடையினில் அரிமா ஏறு நல்கிய தோற்றம் காட்டித்
தொடையினில் தட்டித் தட்டித் துள்ளிய வீரம் பொங்கப்
படைஎலாம் நடுநடுங்கும் படிவீரர் உமறு போனார். 9
இறைவன் ஒரு வானவரைக் காளையாக மாற்றி
அனுப்பினான்
அதிர்ந்திடத் தரைமண் எல்லாம் ஆர்த்திட உமறு செல்ல
முதல்இறை அருள் மேற்கொண்டு முறைசெய வானவர்க்குள்
பதமுற்ற ஒருவா னோரைப் பளிச்சிடும் காளை ஆக்கி
“உதவு போ! நபியாருக்கே உமறுவின் எதிர்நின்று”
என்றான். 10
|