பக்கம் எண் :

258துரை-மாலிறையன்

2. மக்கமாநகர் நீங்கு படலம்

இபுலீசு நிலைமையினை அறிந்தான்

இறையவன்தன் தூதரினை இதயத்தால்

விரும்பியவர் இசுலாம் மாந்தர்

கறைவிலகிக் கனிந்தவராய் அவர்அவர்தம்

இடம்ஏகும் கருத்துக் கொண்டார்;

குறையுடைய மானிடமே குவலயத்தில்

நிலைக்கஎண்ணும் கொள்கை கொண்ட

நிறையில்லா “இபுலீசு” நிலைமைதனை

உடனறிந்து நெருங்கி வந்தே; 1

மதீனத்தார் மயங்கினார் மக்காவினர் உறங்குகின்றீரே

இருட்டுவரும் நிலைகண்டும் விழிக்காமல்

உறக்கத்தில் இருக்கின் றீரே!

திருட்டுமனத் தானான முகம்மதுவின்

திகைப்புரையால் தெளிவு கெட்டுக்

குருட்டுமனம் உடையவராய் மதீனமக்கள்

கொள்கையற்றுக் குலைந்து போனார்

மருட்டுகிற நெறியானை மாய்த்திடாமல்

உறங்குகிற மக்கா மாரே! 2

ககுபாவை முகம்மது இடிக்கப் போகிறான்

புல்லியராம் மதீனாவின் மக்களையே

பொய்யாகப் புகழ்ந்து நாவால்

சொல்லியதை அவர்நம்பி ஏமாந்தார்

முகம்மதுவின் சூழ்ச்சி யாலே

கல்லிதயம் அதுகொண்டு ககுபாவாம்

ஆலயத்தைப் பற்றே இன்றி

வல்லிருகை யால் இடிக்கும் திட்டத்தை

வகுத்துள்ளான்” என்று சொன்னான். 3