முகம்மது இபுலீசைக் கடிந்து கொண்டார்
சொன்னவனாம் இபுலீசு மக்கள்முன்
தோன்றாமல் சொல்லி ஏய்த்தான்
அன்னவனின் சொல்கேட்டு மயக்கமுற்ற
மக்காமேல் அன்பு கொண்ட
முன்னவராம் முகம்மது முன்வந்த
இபுலீசை முனிந்து நோக்கிச்
“சின்னவனாய் நடக்காதே இபுலீசே!”
எனச்சொன்னார் சினத்தி னாலே! 4
மக்கா மக்கள் மதீனா மக்கள் வருந்தும்படி பேசினர்
பழிக்கஞ்சாப் பாதகனின் உரைகேட்ட
மக்காவின் பாவ மக்கள்
வழிக்கண்ட மதீனாவின் மக்கள்எலாம்
தாம்வருந்த, “மக்கா தன்னை
ஒழிக்கத்தான் வந்தீரோ அன்றிநீங்கள்
விழாக்கண்டே ஓங்கத் தானோ?
விழிக்கத்தான் போகின்றீர்” எனவெகுண்டு
மக்கத்தார் வினவி னாரே! 5
மதீனா மக்கள் அடங்கிப் போயினர்
தவறில்லா தவரிடத்தில் தவறுடையோன்
தன்பேச்சால் தவறாய்க் கேட்க
எவரிவர்கள் ஏதேதோ பேசுகிறார்
எனக்கலங்கி மதினா மக்கள்
“நவையில்லார் நாம்வருந்தப் பேசுகின்றார்
எனக்கூறி நடுக்கம் கொண்டே
அவரவர்கள் தம்மிடத்தை அப்போதே
போய்ச்சேர்ந்தார் அடக்கத்தோடே; 6
|