அம்மா நானும் ஆடுமேய்க்கப் போவேன்
“அண்ணார்கள் போவதுபோல் அம்மா யான்
கால்நடைமேல் அன்பு காட்டித்
தண்ணார்பைங் கானகமே நாள்தோறும்
செலவேண்டும் தயக்க மின்றிப்
பண்ணார்செங் கவின் இதழால் உடன்பட்டுப்
பகர்கென்று பன்னிப் பன்னி
விண்ணார்ந்த குரிசிலரும் விழைந்தமனக்
கருத்ததனை விளம்பி னாரே; 4
கொடுமையான காடாயிற்றே
கள்ளிருக்கும் மொழிகேட்ட கனிமுகத்துத்
தாய்அலிமா கவலை யோடும்
“முள்ளிருக்கும் கொடும் புதர்கள் முளைத்திருக்கும்
புற்றுக்குள் முகத்தைக் காட்டிப்
பல்லிருக்கும் நச்சுடைய பாம்பிருக்கும்
மரக்குகையில் பதுங்கி வாழ்ந்தே
உள்ளிருக்கும் ஆள்விழுங்கும் மலைப் பாம்பும்
உடனிருக்கும் ஓநாய் ஆங்கே; 5
இருந்தாலும் அண்ணன்மார்களோடு செல்
இருந்தாலும் குழந்தைகளே! இளையவனின்
விருப்பத்தை எண்ணி அன்பன்
வருந்தாமல் அழைத்தேகி வாடாமல் நலம்தந்து
கொடுந்துன்பம் வாய்க்கும் காட்டில்
பொருந்தாமல் சோலைகளும் சுடர்பொய்கை
வளங்களையும் போய்முன் காட்டி
வருந்தாம ரைமலர்போல் வரவேண்டும்”
எனத்தாயும் பரிந்து சொன்னார்; 6
|