பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்33


மைந்தர்களும் அன்னை சொல்லைப் போற்றினர்

அன்னையவர் சொன்னதனை அருமறையாய்

உளத்தெண்ணி அரிய மைந்தர்

மன்னியசீர் பெருமானை முகம்மதுவாம்

கோமானை மலர்போல் ஏந்திப்

பன்னருஞ்சீர் ஆடுகளைப் பக்குவமாய்

மேய்த்ததன்பின் பரிவு காட்டும்

அன்னையரின் முன்வந்தார் அன்றாடம்

அண்ணலவர் அருமை கண்டே! 7

வளம் பெருகி வாழ்ந்தார்கள்

ஆடுகளும் அளவின்றிப் பெருகினவே

அலிமாவின் அரிய செல்வம்

பீடுயர்ந்து பெருகினவே முகம்மதுவின்

பெருமைமிகு பாதம் பட்ட

காடுயர்ந்து செறிந்ததுவே கனிமலிந்து

பொலிந்தனவே கரைகொள் கால்வாய்

மேடுயர்ந்து நீருயர்ந்து பெருகுநலப்

பயிருயர்ந்து மேன்மை கொண்டார்; 8

ஆயர்குலச் சிறுவரின் பெருமை

தீயமனம் இல்லாத சிறப்புடைய

குலத்தவராய்ச் சிறந்து வாழும்

ஆயர்குலச் சிறுவரொடும் அருள்மகனார்

அன்புபொழிந் தாடிப் பாடித்

தோயமதுப் பாலருந்திச் சுவையுடைய

கனியருந்தித் தொடர்ந்து நெஞ்சில்

நேயமுடன் வளர்ந்திங்கு நீக்கமற

விளையாடும் நிறைநன் னாளில்; 9