6. முறைசீக்குப் போர்ப்
படலம்
முசுதலிக்கு குலத்தினர்
நிலை
நிறையும் பொறையும் அற்றவர்கள் நெருங்கி வாழும் நிலைஉடைய
முறைசீக் கென்னும் ஒரு நகரில் முசுதலிக்குக் குலத்தார்கள்
கறைவாய்ப் பட்ட நெஞ்சினராய்க் கரவும் கொலையும் கைதேர்ந்து
மறையை இகழ்ந்து முகம்மதுவின் மதிப்பை இகழ்ந்து
வாழ்ந்தார்கள். 1
இசுலாமியரைக் கொன்றிடுவார்
ஒன்றே தெய்வம் என்பவர்கள்
ஒட்டி வந்தால் அன்னவரைக்
கொன்றே விடுவோம் எனத்துடிக்கும் கொள்கை கொண்ட கொடியார்கள்
நன்றே அறியா வினைசெய்யும் நவைஉள் ளத்தார் அவரோடு
சென்றே பேசித் திரும்பிவரும் தீன்நல் லாரோ
எவருமிலர். 2
முகம்மது தாக்க முற்பட்டார்
கொள்ளை இனத்தார் இன்னவரின் கொடுமை அறிந்த இறைதூதர்
எல்லை இல்லாச் சினமேவி எதிர்த்துத் தாக்கப் புறப்பட்டார்
முள்ளை முள்ளால் எடுப்பதுவே முறையாம் என்னும்
உரைநெறியே
செல்லும் எண்ணம் மிக்கவராய்ச் செம்மல் எதிர்க்க
முற்பட்டார்; 3
மனைவியருள் எவரை
அழைத்துப் போவது?
பெருமை மிக்கார் பெண்களெனப் பேணும் நபிகள் நாயகமோ
அருமை கொண்ட துணைவியருள் ஆரை யேனும் ஒருவரையே
வரும்அப் போரின் முனைகாணும் வகையில் தம்மோ(டு) அழைத்தேக
விரும்பினார்கள் அதற்கேற்ற வினையை உடன்மேற்
கொண்டாரே! 4
ஆயிசா அன்னை பெயர்
வந்தது
அன்பால் கலந்த துணைவியர்தம்
அரும்பேர் எழுதி வைத்தவற்றுள்
நன்பால் அன்ன தூயமன நபியார் ஒன்றைத் தேர்ந்தெடுத்தார்
பண்பால் சிறந்த மனைவியருள் பனிவாய் மொழியார் ஆயிசாநற்
பெண்பால் இறைவன் அருள்கனியப் பேரும் அதுவே
ஆனதுவே! 5
|