அபாலு பானாவைத் தூதாக
அனுப்பி வைப்பீர்
பழிக்கவே இடமில்லாத
பண்புள்ள தோன்ற லாரே!
அழிக்கவே வந்தீர் எம்மை அறிக்கையை முன்னர்க் கேட்பீர்
விழிக்கனல் மாறி உங்கள் வீரர்நல் அபாலு பானா
தொழிற்பட அனுப்பி வைப்பீர் தூதராய்” என்று சொன்னார்; 5
பகைவர் கருத்துக்கும்
மதிப்பளித்தார்
பகைவரின் உரையைக் கூடப் பண்புடன் ஏற்றுக் கொண்ட
நகைமுகச் செம்மல் தங்கள் நல்அபா லுபானா தம்மை
வகைபெறப் பேசித் தீர்த்து வருகவே” என்று கூறிப்
புகைமனப் பனீகுறைலா பொய்யர்பால் அனுப்பி வைத்தார். 6
பெண்கள் பேசினார்
அச்சமில் லாமல் வீரர்
அபாலுபா னாவும் சென்றார்
உச்சிமேல் கையை வைத்தும் உதறிய கைகா லோடும்
பச்சிளங் குழந்தை யோடும் பதறிய பெண்கள் தோன்றி
அச்சமே கொண்டா ராக அவர்முன்னர்ப் பேச லுற்றார்; 7
எம்மைக் காப்பீர்
ஐயா!
வாய்மையை இகழ்ந்த தாலே வாழ்வினை
இழந்தோம் ஐயா!
தூய்மையைத் துணையாய்க் கொண்ட தோன்றலைப்
பழித்தோம் ஐயா
தீமையைத் தேடிச் சென்று தீவினை புரிந்தோம்
ஐயா!
ஊமையாய் வாழ்ந்த எம்மை ஒதுக்காமல் காப்பீர்
ஐயா! 8
ஏமாந்து விட்டோம்
ஐயா!
நன்மையை இகழ்ந்த தாலே
நானிலத் திழிந்தோம் ஐயா!
புன்மையை நாடிச் சென்றே புகழினைத் துறந்தோம்
ஐயா!
வன்மையை நம்பி நாங்கள் வழிமாறிப் போனோம்
ஐயா!
இன்மையை உண்மை என்றே ஏமாந்தோம் காப்பீர்
ஐயா! 9
கலிமா ஓதாவிட்டால்
முகம்மது கொன்று விடுவார்
என்பன புலம்பிக் கூறி எதிர்நின்ற மக்கள் தம்பால்
வன்பனை அன்ன தோளார் வலியர்அபாலு பானா,
அன்பினை மதித்து நீங்கள் அகம்மது நெறியில்
நின்று
பண்புடன் கலிமா ஓதிப் பணிவதே சிறந்த தாகும். 10
|