7. இறைப்புகழ் மணிமாலைப்
படலம்
இறைவன் ஒருவனே என்றவர்
ஒருவனே இறைவன்; அன்பால்
ஒளிர்பவன் காணத் தக்க
உருவிலன் தீமை யாவும்
ஒழிப்பவன் தானே என்னும்
அருமையை உலகம் காண
ஆற்றலார் தூதர் தம்மைப்
பெருவள வையம் தன்மேல்
பிறப்பித்த பெரியோன் வாழ்க! 1
இறைவனே நலம் செய்ய வலியவன்
என்றவர்
“இணையிலான் எவ்வெ வர்க்கும்
இனிமையே தரவும் வல்லான்
துணையிலான் தூய நெஞ்சுள்
தோன்றுவான்” என்று தன்னைத்
திணைஎலாம் வணங்கு மாறு
தெரிவிக்கத் தூதர் தம்மை
வினைசெய அனுப்பி வைத்த
விண்ணிறை அல்லா! வாழ்க!! 2
அல்லாவே பேரருளாளன்
அளவிலா அருளும் தூய
அன்பையும் உடையோன்; தொண்டர்
உளமெலாம் நிறைவான்
என்னும்
உயர்ந்ததன் மாண்பு கூற
வளமனத் தூதர் தம்மை
வையத்துக் கனுப்பி வைத்த
விளைவினால் பேரின்
பத்தை
விளைவித்த அரியோன் வாழ்க! 3
|