அவனன்றி ஓரணுவும்
அசையாது
ஐவேளை தொழுகை கூறி
அவன்புகழ் பொலிய வைத்துச்
செய்வேலை யாவும் விண்ணின்
சிறப்பினால் என்று காட்ட
மொய்வேலை சூழ்ந்த மண்ணில்
முகம்மது நபியை உய்த்துப்
பொய்வேலை ஒழியச்செய்த
புகழவன் அல்லா! வாழ்க!! 4
பொன்னுரை தந்த புகழோன்
தன்னுரை உலகத் துக்குத்
தந்திட வழியாய்; உற்ற
பொன்னுரை தன்னைப் போற்றிப்
புவியினோர் வளர்க்க
இந்த
மண்ணுறை மனித ராக
மகம்மது தூதர் தம்மை
மின்னுற அனுப்பி வைத்த
மேலவன் வாழ்க! வாழ்க! 5
வாய்மையைத் தூய்மையை
வளர்க்க வந்தவர்
வாய்மையைத் தூய்மை தன்னை
வகையுடன் வளர்க்க; மக்கள்
தீமைஇல் லாமல் வாழ்ந்து
தெளிவுறத் தூதர் கோனைச்
சேய்மைவான் தன்னை
நீங்கித்
திருநபி யாகச் செய்த
தாய்மைநல் லுணர்வு கொண்ட
தனியன்! சீர்அல்லா வாழ்க!! 6
|