பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்499


நெஞ்சுள் ஒளியுடையவர்

மறவராய் மக்கா மண்ணின்

மனிதராய் உயிர்கட் கெல்லாம்

உறவுடை யவராய் நெஞ்சுள்

ஒளிஉடை யவராய் வாழ

நிறைவானின் தூத ராக

நெடியோரை அனுப்பி வைத்த

இறையவன் இணையில் லாத

இனியவன் வாழ்க! வாழ்க! 7

இசுலாம் நெறியை வளர்த்தவர்

கனிவுடன் மக்கள் எல்லாம்

கலிமாவை ஓதச் செய்தும்

இனிதென இசுலாம் தன்னை

இதயங்கள் ஏற்றுக் கொள்ளப்

பனிதவழ் மொழியி னாரைப்

பாரகம் அனுப்பி வைத்த

தனிஒளிச் சுடராய் ஓங்கும்

தகையவன் வாழ்க! வாழ்க! 8

நல்வாழ்வு மலர வைத்தவர்

உயர்வான பண்பு கொண்ட

உளத்தாரை அனுப்பி வைத்து

நயமான உரையால் அன்பால்

நல்வாழ்வு மலர வைத்த

வியன்வான்மண் புகழ்நல் லானை

வேண்டுதல் வேண்டா மையாம்

இயல்பிலான் இறைவன் அந்த

ஈடிலான் வாழ்க! வாழ்க! 9