அரியைப் படைத்தலால் அயன் கடவுள் என்றும் அயனைப் பெற்றுக் காத்தலால் அரி கடவுள் என்றும் மாறுபட்டுழி, இவ் விருவரையும் அழித்தலான் இவர் கடவுள் அல்லர்; அரனே கடவுள் என்பதுபோல - 7 உரை கற்றலின் சிறந்த கருவி ஆரியன் கருத்தில் அருள்வர நடத்தலேயாம். 8 உரை நாரா யணன்பூ ஓரா யிரத்தைக் கரத்தரல் கொய்து அரற்கே கொடுத்துச் சக்கரச் சிறுமையின் நீங்கி நற்சுவைப் பாற்கடல் கண்ணே பள்ளி கொண்டான். 15 என்ற காரக உதாரணம் நோக்கற்குரியது. எடுத்துக்காட்டுக்கள் சிவபெருமான் உயர்ச்சியும் சிறப்பும் தோன்ற அமைந்துள்ளன: அவன்கண் பதினைந்து, அவன் தலை ஐந்து, நெற்றிக்கண் நெருப்பு. - 19 உரை அரிக்குச் சக்கரம் கொடுத்தான் அரன் - இழிந்தோன் ஏற்றல்; அரற்குக் கண்அலர் கொடுத்தான் அரி - உயர்ந்தோன் ஏற்றல். - 36 உரை முருகனது வேல், சம்பந்தனது தமிழ், சம்பந்தனது பிள்ளைத் தமிழ். - 40 உரை நெற்றியின்கண் விழி. - 42 உரை மதுரையை நீக்கினான், மதுரையின் வடக்கு சிதம்பரம். மதுரைக்கு வடக்கு சிதம்பரம். - 48 உரை ‘கால காலனைக் காண்கின்ற போது காலனைத் துரத்தும்அக் காட்சி தானே’ |