புலவர் சிவ. கன்னியப்பன் 105

பாடெலாம் தான்பட்டுப் பலனெலாம் பிறர்கொள்ளப்
       பங்கின்றி உதவு பண்பன்;
ஏடெலாம் மேல்எனும் ‘என்கடன் பணிசெய்தல்‘
       என்பதே எண்ணி யெண்ணி
நாடெலாம் வாழவே நாளெலாம் தன்சுகம்
       நாடாது பாடு படுவோன்;
வீடெலாம் தமிழ்மக்கள் கலியாணசுந்தரன்
       வெற்றிகொண் டாட வேண்டும்.       2

கொல்லாமை பொய்யுரை கூறாமை என்பதே
       குறியாகக் கொண்ட தமிழைக்
கல்லாத பேர்களும் களிகொள்ளத் தந்திடும்
       கலியாண சுந்த ரத்தின்
செல்லான அறுபதாம் ஆண்டுதிரு நாளிலே
       தெய்வத்தைச் சிந்தை செய்து
வல்லாண்மை குறையாமல் நூறாண்டும் அவன்வாழ
       மனமார வாழ்த்து கின்றோம்.       3

குறிப்புரை:-சலியாத - வெறுப்பில்லாத; மனமார - மனம்
பொருந்த மகிழ்ச்சியுடன்;தளராத - சோர்வில்லாத;
பாடு - துன்பம்.

58. உள்ளங் கவர்ந்த பண்டிதர்
கலியாணசுந்தரனார்

‘பண்டிதர்‘ என்றால் பள்ளிக் கூடப்
பையன் களுக்குப் பரிகா சச்சொல்
ஆங்கிலப் பாடத்(து) ஆசான் மாரும்
கணக்குப் போடக் கற்பிப் பவரும்
பூகோள சாத்திரம் புகட்டு வோரும்       5

விஞ்ஞான அறிவை விளக்கு பவரும்
சரித்திரம் சொல்லித் தருகிற பேரும்
சித்திரம் வரையச் செய்கிற வாத்தியும்
தேகப் பயிற்சி ‘டிரில்மாஸ்டர்‘ கூட
ஓட்டமும் நடையும் உருட்டும் பிரட்டுமாய்க்       10