‘பண்டித‘ ராகவே பண்டிதர் இருந்தார். இடக்கை விரல்கள் இரண்டை நீட்டி கருத்துக் கேற்பக் கையை ஆட்டி வலக்கைத் தலத்தில் அடித்து வைத்துச் சங்கீத மத்தியில் சாப்புப் போல 135 அடித்துப் பேசி அழுத்தம் திருத்தமாய்ச் சுளைகளை யாகச் சொற்களைச் சொல்லிப் பதம்பத மாகப் பதியும் படிக்கே அணியணி யாக அடுக்கிய கருத்தொடும் இயக்கி விட்டதோர் எந்திரம் போலத் 140 தங்கு தடையெனல் எங்குமில் லாமல் எத்தனை தூரம் எட்டநின் றாலும் கணீர்க ணீரெனக் காதிலே விழும்படி செவிவழி இனிக்கும் செந்தேன் போலக் கற்பனை மிகுந்த கவினுடைக் கவிதையாய்க் 145 காதாற் காணும் கனவே போலத் தொல்காப் பியத்தின் சூத்திரம் தொடரச் சங்க நூல்களின் சாறு வடித்துச் சிலப்பதி கார ஒலிப்பும் சேர்த்துத் திருக்குறள் ஞானப் பெருக்கம் திகழத் 150 திருமந் திரத்தின் பெருமை திரட்டிக் கம்பன் பாட்டின் செம்பொருள் பெய்து தேவார த்தின் திருவருள் கூட்டித் திருவா சகத்தின் தேன்சுவை நிறைத்துத் திருவாய் மொழியின் தெளிவையும் ஊட்டி 155 எம்மத மாயினும் சம்மதம் என்னும் சமரச சுத்தசன் மார்க்கம் தழுவிப் பண்டைய அறிவைப் புதுமையிற் பதித்துப் பண்டிதர் பிறரிடம் பார்த்தறி யாத அரசியல் சரித்திர அறிவுகள் பொருத்திக் 160 |