‘நாளும் கிழமை‘ யென்று நல்லவர் உரைத்தாலும் ‘நாளைக்கு ஆகட்டும் வேலை அதிகம்‘ என்பாய்! பாழும் பணத்தைத் தேடிப் படும்பாடு கணக்கில்லை. பகவானை எண்ணமட்டும் அவகாசம் உனக்கில்லை (ஒரு)4குறிப்புரை:- படும்பாடு - படுகின்ற துன்பம்; பகவான் - இறைவன்; அவகாசம் -போதியநேரம். 67. இந்தியத் தாய் தோத்திரம் பல்லவி தாயே வந்தனம்! - இந்தியத் தாயே வந்தனம். அநுபல்லவி தாரணி தன்னில் வேறிலை இணையெனப் பூரண வளந்திகழ் புண்ணிய பூமியெம் (தாயே) சரணங்கள் நிலவளம் நீர்வளம் நிறைந்ததுன் நாடு; நீண்டஉன் பரப்பிலும் வேறிலை ஈடு; விலையிலும் விளைவிலும் மலிந்ததுன் தேசம்; வேண்டிய யாவும்உன் எல்லையில் வாசம். (தாயே)1
முப்பதும் பத்துமாம் கோடிஉன் மக்கள்; மூவுலகத்தையும் ஆண்டிடத் தக்கார்; அற்புத மாகிய ஆற்றல்கள் நிறைந்தாய் அறியாத் தனத்தால் அடிமையில் இருந்தோம். (தாயே)2 படையெடுத் தவரும் பசியெடுத் தவரும் பற்பல நாட்டார் உனையடுத் தவரை |