புலவர் சிவ. கன்னியப்பன் 175

சத்தியத்தின் கொடிஇது;
       சக்தி தந்த கொடிஇது;
புத்தி மிக்க ஞானிகள்
       பூஜைசெய்த கொடிஇது;       (கொடி)2

மரணமென்ற எண்ணமே
       மனத்தி லின்றிச் செய்திடும்
திரண மாக எதையுமே
       தியாகம் செய்யத் தந்திடும.்       (கொடி)3

கட்டு விட்ட மக்களை
       அன்பு கொண்டு கட்டியே
ஒற்று மைப்ப டுத்தவே
       உறுதியான கொடிஇது.       (கொடி)4

ஜாதி பேதத் தீமையைச்
       சாம்ப லாக்கும் கொடிஇது;
நீதி யான எதையுமே
       நின்று காக்கும் கொடிஇது.       (கொடி)5

ஊழி தோறும் புதியதாம்
       உறுதி கொண்ட கொடிஇது;
வாழி வாழி நம்கொடி!
       வாழ்க வாழ்க நாடெல்லாம்!       (கொடி)6

128. வைஷ்ணவன் என்போன் யார்?

பல்லவி

வைஷ்ணவன் என்போன் யாரெனக் கேட்பின்
வகுப்பேன் அதனைக் கேட்பீரே!       (வைஷ்)

சரணங்கள்

பிறருடைத் துன்பம் தமதென எண்ணும்
       பெருங்குணத் தவனே வைஷ்ணவனாம்;
உறுதுயர் தீர்த்தத்தில் கர்வங் கொள்ளான்
       உண்மை வைஷ்ணவன் அவனாகும்;