178நாமக்கல் கவிஞர் பாடல்கள்

மனமுவந்திங் குயிர்கொடுத்த
       மானமுள்ள வீரர்கள்
மட்டிலாத துன்பமுற்று
       நட்டுவைத்த கொடியிது!
தனமிழந்து கனமிழந்து
       தாழ்ந்துபோக நேமம்
தாயின்மானம் ஆனஇந்தக்
       கொடியை யென்றும் தாங்குவோம்!(கொடி)4

130.நானோ சண்டாளன்!
சண்டாளன் என்று விலக்கப்பட்டவன் கேள்வி

பல்லவி

நானோசண்டாளன்! - சரி
தானோ உங்களுக்கு?

சரணங்கள்

தாயை யிகழ்ந்தவன் சண்டாளன்;
       தந்தையை நொந்தவன் சண்டாளன்.
தூயவர் நல்லோர் பெரியோரைத்
       தோஷ முரைத்தவன் சண்டாளன்;
தீயவை செய்தே பலர்ஏசத்
       தின்றுழல் கின்றவன் சண்டாளன்
ஏவின செய்வேன் குற்றமிலேன்
       எளியவ னானேன் என்பதற்கே.       (நானோ)1

வீட்டைமறந்தவன் சண்டாளன்;
       வேசியர்க் கலைபவன் சண்டாளன்;
நாட்டைக் காட்டிக் கொடுத்ததனால்
       லாப மடைந்தவன் சண்டாளன்;
பாட்டைத் தனிவழி வந்தோரைப்
       பதுங்கி யடிப்பவன் சண்டாளன்;
ஓட்டைக் குடிசையில் வாழ்கின்றேன்
       ஒருசிறு பாபமும் அறியாத       (நானோ)2