18நாமக்கல் கவிஞர் பாடல்கள்


எத்தனை மிருகம்! எத்தனைமீன்!
       எத்தனை ஊர்வன பறப்பனபார்!
எத்தனை பூச்சிகள் புழுவகைகள்!
       எண்ணத் தொலையாச் செடிகொடிகள்!
எத்தனை நிறங்கள் உருவங்கள்!
       எல்லா வற்றையும் எண்ணுங்கால்
அத்தனை யும்தர ஒருகர்த்தன்
       யாரோ எங்கோ இருப்பதுமெய்.       3

அல்லா வெண்பார் சிலபேர்கள்
       அரன்அரி என்பார் சிலபேர்கள்;
வல்லான் அவன்பர மண்டலத்தில்
       வாழும் தந்தை யென்பார்கள்
சொல்லால் விளங்கா "நிர்வாணம்"
       என்றும் சிலபேர் சொல்வார்கள்;
எல்லா மிப்படிப் பலபேசும்
       ஏதோ ஒருபொருள் இருக்கிறதே!       4

அந்தப் பொருளை நாம்நினைத்தே
       அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்
எந்தப் படியாய் எவர்அதனை
       எப்படித் தொழுதால் நமக்கென்ன?
நிந்தை பிறரைப் பேசாமல்
       நினைவிலும் கெடுதல் செய்யாமல்
வந்திப் போம்அதை வணங்கிடுவோம்;
       வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்.       5

6, தேவி பராசக்தி

நூறென்று மனிதர்க்கு நீதந்த வயசினில்
கூறென்று பலநோய்கள் பங்கிட்டுக் கொள்ளுதையோ?
ஆரெம்மைக் கரப்பவர் அன்னையே உன்னையன்றி?
பாரெம்மைக் கடைக்கண்ணால் தேவி பராசக்தி!