190நாமக்கல் கவிஞர் பாடல்கள்

பட்சிகளின் சிறுகுஞ்சுச் சிறகில் லாமல்
       பறக்கவெண்ணிக் கூட்டைவிட்டுப் பாய்வ தேபோல்
சிட்சை பெற்றுக் கல்விநலம் சேர்வதற்குள்
       சிறுவயதில் மாணவர்கள் சிந்திக் காமல்
கட்சிகட்டும் அரசியலின் விவகாரத்தில்
       கலந்துகொள்ளக் கூடாது; கண்டிப்பாகப்
பட்சமுடன் அதைத்தடுக்கும் ஆசான் மாரைப்
       பரிகசிப்போர் சிறகில்லாப் பறவைக் குஞ்சே.       3

குருபக்தி இல்லாத காரணத்தால்
       குழப்பங்கள் பள்ளிகளில் குமுறக் கண்டோம்
தருபுத்தி ஆசானைத் தாக்கிப் பேசித்
       தமக்கேதோ உரிமையெனத் தருக்கிக் கொண்டு
கருமத்தைக் கல்விதனைக் கருதி டாமல்
       கடமைமறந் துரிமைபுகல் கட்சிகட்டும்
சிறுபுத்தி மாணவரைச் சேர்த்து விட்டால்
       சீரழியும் பள்ளிகளின் சிறந்த சேவை.       4

ஓதலினும் மிகச்சிறந்த(து) ஒழுக்கம்என்ற
       உண்மைதனை மாணவர்கள் உணர வேண்டும்.
மேதினியில் சிறப்படைந்த மேலோ ரெல்லாம்
       மேன்மையுற்ற காரணம் நல்லொழுக்க மேதான்
வேதனைகள் வந்தாலும் விலகிப் போகும்
       வெற்றிகளும் நல்லொழுக்கம் விரவி னோர்க்கே;
ஆதலினால் மாணவர்நல் லொழுக்கம் தன்னை
       ஆருயிர்போல் கருதிஅதைக் காக்க வேண்டும்.       5

பெற்றோர்கள் மிகப்பெரிதும் வறியரேனும்
       பெற்றமகன் கல்விகற்றால் போதும் என்ற
வற்றாத ஆசையினால் வாடித் தேடி
       வயிறார உண்ணாதும் வருந்திச் சேர்த்துப்