புலவர் சிவ. கன்னியப்பன் 191


பற்றோடும் அனுப்புகின்ற பணத்தை யெல்லாம்
       பட்டணத்துப் பகட்டுகளில் பாழாக் காமல்
சிற்றாசை களிற்களித்துச் சீர்கெடாமல்
       சிந்தனையைக் கல்விக்கே செலுத்த வேண்டும்.       6

138. மோட்டார் ஓட்டிகளுக்கு

மோட்டார் ஓட்டுகிற அண்ணா! - கொஞ்சம்
       மெள்ள ஓட்டினால் என்ன?
கேட்டால் வருத்தமேன் இதிலே? - வந்தால்
       கெடுதி உனக்குத்தான் முதலே.       1

அகத்தியம் நேர்ந்துவிட்டாலும் - வேகம்
       அடக்கி ஓட்டலே சீலம்.
மிகத்திறம் வாய்ந்துள பேரும் - வேக
       மிடுக்கில் அசந்துவிட நேரும்.       2

‘டயர்கள்‘ சரியில்லை யென்றால் - வழியில்
       துயரம் பெரிதாகும் சென்றால்,
டயர்கள் மிகப்புதிய வேனும் - ஸ்டெப்னி
       தனியே கையோடு வேணும்.       3

போதை ஊட்டுகிற எதையும் உண்டால்
       போகும் வழியறிவு சிதையும்;
காதைக் கண்ணைமிக அடைக்கும் - காரைக்
       கவிழ்த்து மண்டைகளை உடைக்கும்.       4

காரை ஓட்டுகிறபோது - கவனம்
       வேறு எதிலும்செலல் தீது.
ஊரை நெருங்கிவிட்ட உடனே - தெருவின்
       ஓரம் பார்த்துச்செலல் கடனே.       5

காரில் பலவிதங்கள் அவற்றுள் - இரவில்
       ‘லாரி‘ ஓட்டுபவர் தவற்றை
நேரிற் கண்டபடிதம்பி! நான்
       கூறு கின்றேன்மனம் வெம்பி.       6