உயிரைக் காக்க உடைமை காக்க ஊரைக் காக்கும் போலீசின் பெயரைக் காக்கும் அறிவைக் பேசப் பெரிதும் அதன் மேலாசை. 1 துஷ்டர் யாரும் நடுந டுங்கித் துடுக்கு விட்டு வாழவும் இஷ்டம் போல மற்ற மக்கள் இனிய வாழ்க்கை சூழவும் கஷ்ட மான கடமை செய்யும் காவ லாளர் வாயினால் அட்டி யின்றிப் பயமு றுத்தல் அவசி யந்தான் ஆயினும், 2 குற்ற வாளி யைப்பி டிக்கக் கோரித் தேடும் காவலர் குற்ற முள்ள பேரைக் கூடக் கொடுமை செய்தல் கேவலம். முற்று மிந்தத் தீமை தன்னை விட்டொ ழிக்க முடியுமேல் வெற்றி யோடு போலீ சாரை வேண கீர்த்தி அடையுமே. 3 உதைகொ டுத்தும் அடிய டித்தும் உள்ளே தள்ளிப் பூட்டியும் வதைபு ரிந்தே ஒப்புக் கொள்ளும் வாக்கு மூலம் கேட்டிடும் கதைகள் நித்தம் காவ லாளர் கண்ணி யத்தைத் தேய்க்குமே. இதையு ணர்ந்து கடமை பூண்டு இம்சை செய்தல் நீக்குவீர். 4 7 நா.க.பா.பூ.வெ. எ. 489 |