எந்த நாட்டில் போலீஸ் வேலை இழுக்கி லாமல் வதியுமோ அந்த நாட்டில் குற்ற மற்ற அமைதி யின்பம் அதிகமாம்; இந்த நாட்டின் காவல் வேலை இசைப டைத்த துண்மையே. நிந்தை யுண்டு சிலவி டத்தில் நீக்கி விட்டால் நன்மையே; 5 140. ஆசானுக்கு தாயென அன்பு செய்து தந்தைபோற் பரிந்து சொந்தச் சேயென அணைத்துப் பேசிச் செவ்விய அறிவு கூறித் தூயநன் னடத்தை கற்கத் துணையென நடந்து காட்டும் ஆயநற் குணமு ளோனே "ஆசான்" என் றழைக்கத் தக்கோன். 1 தப்பிதம் கண்ட போதும் தண்டிக்க முனைந்தி டாமல் நட்புடைத் தோழன் போல நயமாக எடுத்துக் காட்டி ஒப்புற வாகப் பேசி உள்ளத்தை உருக்க வல்ல அப்பெருந் தகைமை யேநல் லாசானுக் கமைய வேண்டும். 2 மாணவன் நினைக்குந் தோறும் மகிழ்தரும் வடிவ மாகக் காணுறும் போதே நெஞ்சக் கசடறு காட்சி யாகி
|