புலவர் சிவ. கன்னியப்பன் 199

கைத்தொழில் காத்திடும் ஒருநாடே
       கலகம் குறைந்துள திருநாடாம்;
எத்தனைக் கெத்தனை எந்திரமோ
       அத்தனைக் கத்தனை தொந்தரவே.       (கை)10

கைத்தொழில் தம்மைக் காத்திடுவோம்;
       கலகம் பற்பல தீர்த்திடுவோம்;
பொய்த்தொழில் யாவும் குறைந்திடவே
       பூமியில் நாமே சிறந்திடுவோம்.       (கை)11

ஏழை செல்வன் என்றுவரும்
       எல்லாப் பிணக்கும் நின்றுவிடும்;
வாழிய வாழிய கைத்தொழில்கள்!
       வாழிய நித்திய சத்தியமும்!       (கை)12

144. சத்திய விரதம்

சத்திய விரதம் சாதிப்போம்;
       சமரச வாழ்க்கை போதிப்போம்;
உத்தம சேவை இதுவாகும்;
       உலகத் துக்கே பொதுவாகும்.       1

அன்பின் பெருமையை எடுத்துரைப்போம்;
       ஆயுதக் கொடுமையைத் தடுத்துரைப்போம்;
துன்பம் யாவையும் சகித்திடுவோம்;
       தூயநன் னடைத்தைகள் வகித்திடுவோம்.       2

பொய்யும் இம்சையும் வஞ்சனையும்
       பூதலம் எங்கும் மிஞ்சினதால்
மெய்யும் கருணையும் தழைத்திடவே
       வேண்டிய விதங்களில் உழைத்திடுவோம்.       3

வீரம் என்பது கொலையன்று
       வெற்றியும் அதனால் நிலையன்று;
தீரம் என்பது திடசாந்தம்;
       தெரிவிப் பதுநம் சித்தாந்தம்.       4