புலவர் சிவ. கன்னியப்பன் 21


சூது போலப்பல புரிவான் - உலகச்
       சூதை வெல்லவழி தருவான்
தீது போலஒன்று செய்வான் - அதில்
       திகழும் நன்மைபல செய்வான்.       4

ஆணின் அழகுமிக வருவான் - பெண்கள்
       ஆவிசோர மயல் தருவான்.
நாணிப் பெண்அருகில் செல்வான் - அவன்
       நகைத்துப் பெண்வடிவு கொள்வான்.       5

பெண்ணின் வடிவழகில் வந்தே - ஆண்கள்
       பித்து கொள்ள மயல்தந்து
கண்ணைச் சிமிட்டுவதற் குள்ளே - ஒரு
       காளை ஆண்வடிவு கொள்வான்.       6

தாயைப் போல்எடுத்தே அணைப்பான் - உடனே
       தந்தை போற்கடிந்து பணிப்பான்
மாயக் காரமணி வண்ணன் - வெகு
       மகிமைக் காரன்எங்கள் கண்ணன்.7

கலகப் பேச்சும் அவன்வேலை - மாற்றும்
       கருணை வீச்சும்அவன் லீலை
உலகம் முழுதும் அவன் ஜாலம் - அதை
       உணர்ந்து கொள்வதே சீலம்.8

9. ஆயன்கண்ணன்

கண்ணன் உறவைப் பிரியாதே
       காரியம் இன்றித் திரியாதே
எண்ணம் தூயது என்றானால்
       எதுசெய் தாலும் நன்றாகும்.       1

ஊக்கமும் உறுதியும் உண்டாகும்
       உழைப்பிலும் களைப்பெதும் அண்டாதே.
ஆக்கமும் ஆற்றலும் பெறலாகும்
       ஆயன் கண்ணன் உறவாலே.       2