துன்பம் எதையும் தாங்கிடலாம் துயரம் உடனே நீங்கிடலாம் அன்பும் அறிவும் பெரிதாகும் அச்சம் என்பதும் அரிதாகும். 3சிரிப்பும் களிப்பும் நிறைந்துவிடும் சிடுசிடுப் பெல்லாம் மறைந்துவிடும் விருப்பம் எதுவும் சித்திபெறும் வித்தகக் கண்ணன் பக்தியினால். 4 மாடுகள் மேய்க்கும் வேலையிலும் மகிழ்ந்திடும் கண்ணன் லீலைகளால் பாடுபட் டுழைத்திட அஞ்சோமே பாரில் யாரையும் கெஞ்சோமே. 5 தூதுவன் ஆகித் துணைவருவான் தொழும்பனைப் போலும் பணிபுரிவான் ஏதொரு தொழிலும் இழிவல்ல என்பது கண்ணன் வழிசொல்லும். 6 எல்லா உயிரும் இன்பமுறும் இன்னிசை பரப்பித் தென்புதரும் புல்லாங் குழலை ஊதிடுவான் பூமியில் கடமையை ஓதிடுவான். 7
பக்தருக் கெல்லாம் அடைக்கலமாய்ப் பாதகர் தங்களை ஒடுக்கிடுவான் சக்திகள் பலவும் தந்திடுவான் சங்கடம் தீர்த்திட வந்திடுவான். 8
ஆடலும் பாடலும் மிகுந்துவிடும் அழகன் கண்ணன் புகுந்தஇடம் ஓடலும் ஒளித்தலும் விளையாட்டாம் ஒவ்வொரு செயலும் களியாட்டே. 9
|