புலவர் சிவ. கன்னியப்பன் 225

மனைவியும் மக்களும் மற்றுள சுற்றமும்
குலவிட உங்கள் குடித்தனம் சிறந்து
காந்தியை எண்ணிக் கடவுளை நம்பிச்
சத்திய சாந்த சன்மார்க்க நெறியில்
பல்லாண்டு வாழ்வீர் பரமன் அருளும்.       2

வேறு

பொங்கி வழிந்திடும் அன்போடு
       பொங்கல் திருநாள் கொண்டாடி
திங்கள் மும்மாறி பொழிந்திடவும்
       தீமைகள் யாவும் ஒழிந்திடவும்
எங்கும் மாந்தர்கள் எல்லாரும்
       ஏதொரு குறையும் இல்லாமல்
இங்கித முற்றிட வேண்டுமென
       ஈசன் மலரடி பூண்டிடுவோம்.       3

ஏரைத் தொழுதால் சீராகும்
       என்கிற அறிவே நேராகும்
பாரில் இதனை மறந்ததனால்
       பஞ்சம் என்பது நிறைந்ததுவே.
ஊரும் நாடும் உயிர்வாழ்தல்
       உழவன் காக்கிற பயிர்வாழ்வால்
தேரும் படிவரும் ஒருநாளே
       தெய்விகப் பொங்கல் திருநாளாம்.       4

வேலும் போரும் வெற்றிகளும்
       வேறுள எவ்வித பெற்றிகளும்
சீலம் மிக்குள உழவேபோல்
       சேமம் தருகிற தொழிலாமோ?
பாலும் நெய்யும் பசுவாலே
       பகடுகள் எருதின் இசைவாலே
சாலும் உழவும் சரியானால்
       சங்கடப் பஞ்சம் வருமோ தான்?       5

8 நா.க.பா.பூ.வெ. எ. 489