ஏற்றத் தாழ்வுகள் எண்ணாமல் எவ்விதப் பிசகும் பண்ணாமல் போற்றும் அன்பே நெறியாகப் பொதுநல வாழ்வே குறியாகச் சாற்றும் படிவரும் பொன்னானே சமரசப் பொங்கல் நன்னாளாம் ஆற்றல் பற்பல எய்திடினும் அறமே எதிலும் செய்திடுவோம். 6
மைந்தரும் உங்கள் மனைவியுடன் மற்றுள சுற்றம் அனைவருமே சுந்தரப் பொலிவுடன் களிகொண்டு சுவைமிகும் பொங்கல் அமுதுண்டு சிந்தையில் தெய்வம் தங்கிடவும் சிறப்புடன் மங்களம் பொங்கிடவும் வந்தனை பொங்கும் மனத்தோடு வணங்கி உங்களை வாழ்த்துகிறோம். 7 குறிப்புரை:- இங்கிதம், - கருத்து, இனிமை, குறிப்பு; ஆற்றல் - சக்தி; பொலிவு - அழகியதோற்றம்; பகடு - யானை, எருமை. 165. உழவுப் பொங்கல் பொங்குக பொங்கல் பொங்குகவே புதுவளம் நிறைந்தறம் தங்குகவே! எங்கணும் யாவரும் இன்பமுற ஏர்த்தொழில் ஒன்றே தென்புதரும். 1 உணவுப் பொருள்கள் இல்லாமல் உயிரோடு இருப்பது செல்லாது; பணமும் அதுதரும் நலனெல்லாம் பயிர்கள் விளைப்பதன் பலனேயாம். 2 |