24நாமக்கல் கவிஞர் பாடல்கள்

கல்வியில் தேறிச் சிறந்திடலாம்
       கலைகளின் ரசனை நிறைந்திடலாம்;
பல்வித நன்மைகள் பெறலாகும்;
       பாலன் கண்ணன் உறவாலே.       8

பண்ணும் காரியம் முற்றிலுமே
       பழுதில் லாமல் வெற்றி பெறும்
கண்ணன் திருவருள் சூழ்ந்திடுவோம்;
       கவலையில் லாமல் வாழ்ந்திடுவோம்.       9

குறிப்புரை:- லோலன் - உலகை நடத்தும் கண்ணன்.

11. வடிவேல் முருகா

வாவா முருகா! வடிவேல் முருகா!
       காவாய் முருகா! கடிதே முருகா!
தேவா உனையே தினமும் தொழுவேன்
       தீவாய் பிணியைத் தீரித் தினமே.       1

அழியா அழகா! அறிவாம் முருகா!
       கழியா இளமைக் கடலே முருகா!
மொழியா இன்பம் அடையும் முறையை
       ஒளியா தருள்வாய் ஒருவா முருகா!       2

குறையா அழகே! குமரா முருகா!
       மறையா வையம் அறியா ஒருவா!
சிறைவா யுலகில் சிறுகும் எளியேன்
       சிறுகா விதமுன் திறமே தருவாய்!       3

தளரா உடலும் சலியா உயிரும்
       குளரா உரையும் குறையா அறிவும்
வளரா வாடா வடிவம் உடையாய்!
       எளியாய்! அடியார்க் களியே! ஒளியே!       4

நரையும் திரையும் நணுகா முருகா!
       கரையும் பிணியும் களையொன் றறியாய்
விரியும் உலகின் விரையே முருகா!
       வருவாய் முருகா! வரமே தருவாய்!       5